Find us on Google+ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Monday 24 September 2012

கைக்குள் உலகத்தை கொண்டு வந்தது கூகுள்

கூகுளில் கிடைக்காத தகவல்களே இல்லை என்பது மட்டுமே நாம் அறிந்தது, ஆனால் தற்போது கூகுளிடம் ஒப்பந்தம் செய்யாத இந்திய நிறுவனங்களே இல்லை.

உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மாபெரும் ஆர்டர்களைப் பெறுவதிலேயே இன்போசிஸ், விப்ரோடிசிஎஸ் பேன்ற இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 80,000 கோடி சந்தை கொண்ட இந்தியாவின் நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்ப சேவையை வழங்கி அந்த சந்தையை வளைத்துப் போடுவதில் கூகுள் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 1,000 நிறுவனங்கள் கூகுளின் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் எல்லாமே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவை ஆகும்.
அமெரிக்கா, ஐரோப்பா, இப்போது வளைகுடா நாடுகள் பக்கமே இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. பொதுவாக உள்நாட்டு சந்தையை அவை மதிப்பதே இல்லை.
இந் நிலையில், இந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளை கூகுள் வழங்க ஆரம்பித்துள்ளது. கூகுள் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களில் வோல்டாஸ், யெபி, நீல்கமல், ஹிராநந்தனி, இன்டியா இன்போலைன் போன்றவை முக்கியமான நிறுவனங்களாகும்.
வேர்ட் பிராஸஸிங், இமெயில் சேவை, தரவுகள் (டேட்டா) சேமிப்பு உள்பட தன்னிடம் உள்ள எல்லா வகையான சேவைகளையும் கூகுள் இவர்களுக்கு வழங்குகிறது.
இவர்களை குறி வைக்க என 'India, Get Your Business Online' என்ற புதிய விற்பனைத் திட்டத்தையும் தொடங்கி, தனது மார்க்கெட்டிங் டீமை முழுமையாக களமிறக்கி விட்டுள்ளது கூகுள்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,000 நடுத்தர, சிறிய தொழில் நிறுவனங்களை தனது வலையில் இழுத்துவிட்ட கூகுள், இவர்களுக்கு இலவச கூப்பனையும் வழங்குகிறது. இதை வைத்து கூகுள் இணையத்தளத்தில் தங்களது நிறுவனத்தையும் பொருட்களையும் இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்யும் அனுமதிக்கிறது.
2014ம் ஆண்டுக்கள் 5 லட்சம் இந்திய தொழில் நிறுவனங்களை தனது சேவைக்குள் கொண்டு வருவது கூகுளின் திட்டமாம்.

Thursday 6 September 2012

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

இன்றைய நிலையில்  வயது வித்தியாசமேயின்றி  அனைவரது கை இடுக்குகளிலும் ஆறாவது விரலாக பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறது இந்த கைபேசி.
இயந்திர உலகில் நாம் படும் இன்னல்களுக்கிடையில் நம்மோடு சேர்ந்து வியர்வைக்குள்ளும்,  நெரிசல்களுக்குள்ளும்  சேர்ந்து அல்லல் படுவதோடு மட்டுமல்லாமல்  அழுக்குகளையும்  படிய வைத்து கொள்கிறது.

உண்ணும் போதும் , உறங்கும் போதும்  என்று  கூடவே  நம்முடன் பயணம் மேற்கொள்ளும் கைபேசிகளின் சுகாதாரத்தைப் பற்றி என்றேனும் நாம் கவலைப்பட்டதுண்டா?

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் ஓர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
நம் வீட்டு கழிவறைகளில் இருக்கும் கிருமிகளை விட நாம் கையில் வைத்திருக்கும்
கைபேசிகளில் தினந்தோறும் படியும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமென்று .

சின்ன சின்ன விசயங்களை நாம் கண்டுக்காமல் விட்டுவிடுவதன் விளைவு தான் இந்த திடுக்கிடும் தகவலின் மறுபக்கம்.
தற்போது வயிறு சம்பந்தமான நோய்களால் அதிகப்படியான  மக்கள் மருத்துவமனை
வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர். 
இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மட்டுமல்ல ,
ஆறாவது விரலான செல்போன்களையும் கையில் இணைத்துக் கொண்டே உண்பது தான்.

வாய்க்கு அடைப்பு போடாவிட்டாலும் பரவாயில்லை, இயன்றவரை  கைபேசிக்கு உறை போட்டு பயன்படுத்துங்கள்.
முடிந்தவரை துணிகளால் ஆன உறைகளை பயன்படுத்தினால் அடிக்கடி சுத்தம் செய்து பயன் படுத்துங்கள்.
சுகாதாரம் நம்மிடம் உள்ள சின்ன சின்ன விசயங்களில் இருந்தே தொடங்குகிறது.

Tuesday 4 September 2012

முதல் அர்ப்பணிப்பு

என் முதல்
அழுகையைக் கேட்டு
ஆனந்தம் கொண்ட
என் அன்னைக்கு
எனது முதல் அர்ப்பணிப்பு
என் எழுத்துக்கு கிடைத்த
அங்கீகாரமே ...

பயணங்கள் தொடரும் ...

Sunday 26 August 2012

மிளிரத் துடிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரம்


sஓடி விளையாடு பாப்பா , நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பழமொழிக்கேற்ப விளையாட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சரவணக்குமார்.



2014-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் நமது இந்தியன் அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் .
அவரது ஒலிம்பிக் கனவை அவரே நமது புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நான் சிவகங்கையில் உள்ள ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.  என் அப்பா லாரி ஓட்டுனராக பணிபுரிகிறார்.எனது அம்மா இலத்தரசி, எனக்கு ஒரு இளைய சகோதரனும், மூத்த சகோதரனும் இருக்கின்றனர்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஜூனியர் பிரிவில் மாவட்ட அளவில் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வாகை சூட்டினேன். அன்றிலிருந்து  இன்று வரை 6 முறை மாநில அளவிலான கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
எனக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது இருந்த ஆர்வமும் எனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் கொடுத்த ஊக்கமுமே நான் உலக்கோப்பைக்கு தேர்வானதற்கான மூலக்காரணம் என்கிறார் .

நீங்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறீர்கள் விளையாட்டால் உங்கள் படிப்பிற்கு தடையேதும் ஏற்பட்டதுண்டா ? என்று கேட்டதற்கு
சட்டென்று அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்ததேயில்லை.  எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள்  மற்றும் சகோதரர்கள் என அனைவரும் என் ஆர்வத்தின் போக்கிலேயே என்னை விளையாட அனுமதித்ததோடு எனக்கு அதிக உற்சாகமூட்டிவருகின்றனர்.

அதே  நேரத்தில் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னரே விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்திவருகிறேன் என்கிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்ததும் விளையாட்டுத் தொடர்பான படிப்பையே தேர்வு செய்து படிக்கப் போவதாகவும் விளையாட்டையே தனது உயிர் மூச்சாகவும் இறுதி மூச்சாகவும் நினைப்பதாகவும்  கூறுகிறார்.
இவர் அந்தமான் நிக்கோபார் , கோவா, மற்றும் ஜம்மு காஷ்மீர் வரையிலும் சென்று தமிழகத்தின் புகழை இந்தியத் தலைநகர் வரை தலைநிமிரச் செய்துள்ளார்.
இறுதியாக கோவாவில் விளையாடிய கால்பந்தாட்டத்தில் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஆட்டத்தின் தனித்திறனே எதிர் அணிக்கு செல்லும் பந்தை தடுத்து நிறுத்தி தனது அணியின் பாயிண்டை உயர்த்துவது தான்.
இங்கிலாந்து கால்பந்து வீரரான ஜான்டெரி தான் என்னுடைய ரோல் மாடல். அவரது ஆட்டத்தை அடிக்கடி சீடி போட்டு பார்ப்பேன் , அவரிடம் இருந்து  கற்றுக்கொண்ட கால்பந்தாட்டத்தின் நுணுக்கங்கலாளே எனக்கு  2014-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாட வாய்ப்பு  கிடைத்துள்ளது என்று பெருமித்துடன் சொல்கிறார்.
காமென்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப்  பதக்கம் வாங்கி தமிழகத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே எனது கனவு என்று உறுதியாக கூறுகிறார் நாளைய தமிழகத்தின் புகழை தலைநிமிரச் செய்யப்போகும் ஒலிம்பிக் நட்சத்திரம்.


ஆங்கில கேள்வி தமிழுக்கு தோல்வி.

யு‌பி‌எஸ்‌சி தேர்வு முடிவில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டு வருவதற்கு காரணம் என்ன?

 "வெள்ளத்தால் அழியாது

 வெந்தளாலாலும் வேகாது

 கள்ளர்க்கோ பயமில்லை

 காவலுக்கோ துணையில்லை"

 

எதனாலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியில் இன்றைய நிலையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ்வழிக் கல்வி ஒன்றும் , ஆங்கில வழிக்கல்வி என்று மற்றொன்றுமாய் . இரண்டு மொழிகளிலும் உள்ள பாடங்கள் ஒன்று தான். மொழி மட்டுமே வேறுபட்டவை என்றாலும் இன்றைய நிலையில் அரசு தேர்வுகளுக்காக(டி‌என்‌பி‌எஸ்‌சி,யு‌பி‌எஸ்‌சி) படிக்கும் மாணவர்களுக்கிடையே பெரும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளது.

 

தொடக்கப்பள்ளியிலிருந்தே தமிழ் வழியிலையே பயின்று வந்த மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது மன உழைச்சலினாலே பாதி பேருக்கு மேல் வேறு வேலைகளை தேடி செல்கின்றனர்.

 

அப்படி என்ன மன உழைச்சல் இருக்கப் போகிறது என்கிறீர்களா?

 

ஆரம்பக் கல்வியையே ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு போட்டித் தேர்வுகள் அவ்வளவு மலைப்பானது அல்ல. அதே சமயம் தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் சற்று மலைத்துப் போய் நின்று விடுகின்றனர்.

 

தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் தேர்வுக்கு தயாராகும் போது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு புத்தகங்களையும்  வைத்து அர்த்தம் புரிந்து படிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால்,

 

தமிழ், ஆங்கில விளக்கம் பார்ப்பதற்காகவே படிப்பதில் பாதி நேரம் செலவிட வேண்டியிருக்கு. 

இதற்கு என்ன தான் மாற்று என்கிறீர்களா?

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் வழி சமச்சீர் கல்வி புத்தகத்திலையே முக்கியமான வாக்கியங்களை மட்டும் அடைப்புக் குறிக்குள்

கொடுக்கலாமே. இதனால் தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களும் இரண்டு மொழிகளிலும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

 

போட்டித் தேர்வுக்கு படிப்போருக்கும் மிக எளிமையானதாக அமையும். இந்த மாற்றத்தை கூடிய விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் ஆண்டுகளில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவிகிதத்தினை எட்டிப் பிடிப்பார்கள் தமிழக மாணவர்கள்.

 

இந்த மாற்றம் தொடர்பாக புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார் பட்டுக் கோட்டையைச் சேர்ந்த மாணவி அனுசுயா .

     நான் பள்ளிக் கல்வியை பட்டுக் கோட்டை அரசு பள்ளியிலையே  முடித்து விட்டு , தகவல் தொழில் நுட்டபத் துறையில்  இந்த ஆண்டு பொறியியல் முடித்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பதே கனவென்பதால் தற்போது மனித நேயம் சைதை துரைசாமி "ஐ.ஏ.எஸ்" அகடாமியில் பயிற்சி பெற்று வருகிறேன்.

 

நான் பள்ளிப்படிப்பை தமிழ் மீடியத்திலையே படித்து விட்டு தற்போது "யு‌பி‌எஸ்சி" தேர்வுக்காக முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பது கடினமாகவே உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் இங்கிலிஸ் மீடியம் என இரண்டு புத்தகங்களையும் அருகருகே வைத்துக் கொண்டு அர்த்தம் புரிந்து படிப்பதில் நேர விரயம் அதிகமாகிறது.

 

இதனால் தமிழ் மீடியப் புத்தகத்திலையே முக்கியமானவற்றை மட்டும் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு எளிமையானதாக இருக்கும்.

 

அடுத்ததாக ,  சென்னை அப்பாலோ "ஐ.ஏ.எஸ்" பயிற்சி மையத்தில் தற்போது

டி.என்.‌பி‌.எஸ்‌.சி குரூப் ஒன்றுக்காக படித்து வரும் அபிநயா கூறுகையில், சிவகங்கை  மாவட்டம், திருப்பாச்சத்தியிலே எனது ஆரம்பக் கல்வியை முடித்தேன் அதனைத் தொடர்ந்து மதுரை லதாமாதவன் பொறியியற் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்று விட்டு, கடந்த இரண்டு  மாதங்களாக அப்பலோ பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். தமிழ் மீடியத்திலையே படித்து வந்ததால் பொருளாதாரம் , வணிகவியல் போன்ற அறிமுகமில்லாத பாடங்களை படிக்கும் போது ஆங்கிலத்தில் படிப்பது சற்று கடினமாகவே உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பில்

அறிவியலை முதற்பாடமாக படித்துவிட்டு தான் இந்த பயிற்சி மையத்தை அணுகுகிறார்கள் . பயிற்சி மையத்தில் இரு தரப்பு வழிக் கல்வி (தமிழ் , ஆங்கிலம்) மாணவரக்ளுக்கும் பயிற்சி தரப்படுவதால் பெரும்பாலும் ஆங்கிலதிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களைப் பற்றிய தெளிவு இல்லாமலே தேர்வுக்கு செல்லும் படியான சூழல் அமைகிறது. இன்னொரு பக்கம் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை முதன்மைப் பாடமாக படித்து வந்தவர்களுக்கு அறிவியலை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பதற்கு புதுமையாக உள்ளது.

 

மேலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு பல புத்தகங்களை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளதால் நீண்ட நேரம் விரயமாகிறது.

 

புதிய தலைமுறையின் இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்தினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று ஆதங்கமாய் கூறி முடிக்கிறார் அபிநயா.

Monday 6 August 2012

கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ?

கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ? இதற்கு காரணம் நீங்கள் அல்ல. கணக்கு பாடம் கற்பிக்கும் உங்கள் ஆசிரியர் தான் என்கிறார் கோவையைச் சேர்ந்த கணித ஆசிரியர் உமா தாணு . இன்றைய பள்ளி ஆசிரியர்கள் கணித பாடத்தை முறையாக கற்பிப்பதில்லை என ஆதங்கப் படும் இவர்,  கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் 

 

வசதி படைத்தோர் "அபாகாஸ்" பயிற்சி வகுப்பிற்கு சென்று தங்களது கணித திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். வசதி இல்லாத ஏழை மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்னும் நோக்கத்திலையே எனது சேவையை தொடங்கியுள்ளேன் என்கிறார். உமா தாணு. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த இந்தியரான, ஆரியப்பட்டர் இல்லாவிட்டால் இன்று கணித எண்களே முடிவில்லா நிலைக்கு சென்றிருக்காது.

ஓய்வு பெற்ற கணக்கு ஆசிரியரான உமா தாணு, 'மனிதநேய பேரவை' எனும் அமைப்பின் பொதுச் செயலராக இருந்து, சமுதாய சேவைகள் புரிந்து வருகிறார். தனது 35 ஆண்டு கால அனுபவத்தை வீணாக்காமல், கணித பாடங்களை கற்பிக்க உதவும் சில எளிய வழிமுறைகளை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து உமா தாணு கூறியதாவது :
ஆறாம் வகுப்பில் இருந்து 'ஜியாமெட்ரிக் பாக்ஸ்' பயன்படுத்தும் நம் தமிழக மாணவர்களுக்கு set square( மூலை மட்டங்கள் ) எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.  ஏனென்றால், இது குறித்து ஆசிரியர்கள் விளக்குவதில்லை. இந்த மூலை மட்டங்களை  பயன்படுத்தி, நுணுக்கமான பல கோணங்களை (Angle) அமைப்பது எப்படி என்பதை ஆய்வு செய்து தீர்வு கண்டுள்ளேன்.
இங்ஜினியரிங், பாலி டெக்னிக் படிப்புகளில் சேரும் போது மூலை மட்டங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாது. பள்ளியில் இது குறித்து எதுவுமே தெரியாத மாணவர்கள், கல்லூரியில்தான் முதல் முறையாக தெரிந்து கொள்கின்றனர். இதை பள்ளி படிப்பின் போதே தெரிந்து கொண்டு விட்டால் கணிதம் எளிதாகி விடும் அல்லவா?
உருளை (Cylinder), கூம்பு (cone), கோளம்(Sphere) ஆகியவற்றின் காண அளவு, வளைபரப்பு, மொத்தப்பரப்பு ஆகியவற்றை கணக்கிட பயன்படும் சூத்திரங்களை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக, குறைந்த செலவில் சில உபகரணங்களை கண்டு பிடித்துள்ளேன்.

இதை உருவாக்க வெறும் , 10 ரூபாய் போதும். இதை பயன்படுத்தி படித்தால்,
சூத்திரங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. இந்த உபகரணங்களை  மணக்கணக்கில் கொண்டு வந்தாலே, சூத்திரம் நினைவுக்கு வந்துவிடும்.

அல்ஜீப்ரா பகுதியில் இருபடி கோவைகளை காரணிப்படுத்துதல், கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி , ஒன்பதாம் வகுப்பில் காரணிப்படுத்துதல் பாடம் துவங்குகிறது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை கண்டுபிடிக்க சுலபமான முறையை உருவாக்கியுள்ளேன்.

உதாரணத்திற்கு, இரு எண்களின் பெருக்குத் தொகை  4032 ம் கூட்டுத் தொகை, 16 ம் இருந்தால், இதன் காரணிகள் எவை? என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டால் , தற்போது கற்றுத் தரப்படும் முறையின்படி விடையளிக்க அதிக  நேரம் தேவை.
அதற்கு பதிலாக, மிகச் சிறிய எண்ணால் ஒரு பக்கம் வகுத்தும், அடுத்த பக்கம் பெருக்கியும் வந்தால் , இரண்டே நிமிடத்தில் விடை கிடைத்து விடும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் இந்த முறையை தெரிந்து கொண்டால், சமச்சீர் கல்வி கணித பாடத்தை மட்டுமல்ல, வேலைக்கான போட்டித் தேர்வுகளையும்   எளிதாக கையாள முடியும்.

தான் கண்டுபிடித்த எளிய கணித உத்தியை  தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஒரு நாள் வகுப்பு ஏற்பாடு செய்து பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு கருத்தாளராக இருந்து பயிற்சி அளிக்க விரும்பிய உமா தாணுவின் கோரிக்கையை ஏற்ற  கோவை அரசு அத்திட்டத்தை  கோவையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறது.
இந்த கணித முறையை அனைத்து தமிழக மாவட்டங்களையும் சென்றடைய தமிழக முதல்வர் அனுமதித்தால்  மானவர்களின் கணித திறன் மேம்படும்.    




இலட்சத்தில் ஒருவன் அதுவும் தமிழன்

குழந்தை பருவத்திலிருந்தே அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக இன்று நாசா வரை செல்லத் தேர்வாகியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம். இவ்வளவு சிறிய வயதில் நாசா செல்ல இருக்கும் முதல்  தமிழன் ஸ்ரீராம் தான்.  அவருடைய சாதனைகளை அவரே புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.


நான் மதுரை டி.வி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா குழந்தைகள் நல மருத்துவராக பணி புரிகிறார். அம்மா இல்லத்தரசி . எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும்  உள்ளனர்.

என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என் அப்பா மற்றும் எனது பெரியப்பா எலெக்ரானிக் கருவிகள் பொருத்தப் பட்ட விளையாட்டுப் பொருட்களையே
எனக்கு வாங்கித் தருவர்.

அந்த விளையாட்டுப் பொருட்களில் எலெக்ட்ரானிக் கார்களை தனித்தனியாக பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்த்து காரை ஓட வைப்பேன். எனது பெரியப்பா எலெக்ட்ரானிக் துறையில் பொறியியல் முடித்து விட்டு , மதுரையில் தனியார் இண்டக்சன் ஸ்டவ் நிறுவனத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.  அவர் எனக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாகவே எனக்கு அறிவியலின் மேல் இருந்த ஆர்வம் அதிகரித்தது.

நான் படிக்கும் மதுரை டி.வி.எஸ் பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் எனது படைப்பையே முதன்மையானதாக எப்போதும் விளங்கியது. மற்றும் மண்டல, மாநில , தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.
அறிவியலின் ஒரு பிரிவான ரோபாடிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வாயிருந்தேன். எனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ரோபாடிக்ஸ் பற்றிய தகவல்களை  இணையத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.

இணையத்தின் வாயிலாக கற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கும் எனது பெரியப்பாவே தீர்வளிப்பார். 

'மெக்சஸ் எஜிகேசன்' மற்றும் 'ஐகென் சயண்டிபிக்' சார்பில் இளம் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் படைப்புத் திறன் போட்டியை சர்வதேச அளவில் நடத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நடந்த போட்டியாதலால் ஏழு இலட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வானவர்கள் ஏழு பேர் மட்டுமே . அதிலும் இரண்டு பேர் இந்தியர்கள்.

லக்னோவைச் சேர்ந்த மாணவர் முகமது சித்திக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நான் (ஸ்ரீராம்)  , மீதம் 4 மாணவர்கள் பிற நாடுகளைச்‌ சேர்ந்தவர்களாகவும், ஒருவர் மட்டும் "ஐ‌எஸ்‌ஆர்‌ஓ" –வில் பணியாற்றுபவர். எங்களுக்கு  பயிற்சி அளிப்பதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

மெக்ஸஸ் நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வில் பதினாறு மாணவர்கள் இந்தியாவில் இருந்து தேர்வாகி அடுத்த சுற்றுக்காக மும்பை செ‌ன்றிருந்தோம்.
முதல் சுற்று திறனாய்வுத் திறனை சோதிக்கும் அடிப்படையில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த சுற்றுகள் அறிவியல் சாதனங்களின் அடிப்படையில் இருந்தது. இறுதியாக மேடைப் பேச்சு போட்டி முடிவடைந்தததும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

தேர்வான ஏழு பேரையும் அமெரிக்க அதிபர் ஒபாமா நாசாவிற்கு அழைத்து 8 நாட்கள் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்கியாக இருக்கிறது.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்ததும் கோவையில் உள்ள கல்லூரியில் ரோபாடிக்ஸ் சார்ந்த படிப்பினை தேர்வு செய்ய எண்ணியுள்ளதாக கூறியுள்ள ஸ்ரீராம்.
மெக்ஸஸ் நிறுவனமே எங்களுக்கு பயிற்சி அளித்து எங்களை அறிவியலாளராக்கினால் விரைவில் எங்களைப் போன்ற இளைய கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்பு இந்த உலகிற்கு கிட்டும் என்கிறார் பெருமிதத்துடன்.

இன்னும் எத்தனையோ படைப்புகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் இளையதலைமுறையினரை வெளிச்சத்திற்கு கொண்டுவர இது போன்ற   பல போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளியுங்கள் என்று கூறி நிறைவு செய்தார்.



"வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி

  "வெற்றி மேல் வெற்றி    விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார்     இல்லேஸ்வரி

திருநெல்வேலி மாவட்டம் நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் வறுமையின் ஓட்டத்தில் பிறந்த இல்லேஸ்வரிதனது தொடர் ஓட்டத்தின் மூலம் பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் இல்லேஸ்வரி  பத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இவரது தந்தை விவசாயி , தாய் இல்லத்தரசி இவளுக்கு ஒரு இளைய சகோதரியும்  உண்டு.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இல்லேஸ்வரிக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாம். அவரது ஆர்வத்திற்கு முக்கிய காரணமே   அவரது அப்பா முத்து என்கிறார் இல்லேஸ்வரி. நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் இருந்து  5 கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும் வள்ளியூர் விளையாட்டு மைதானத்திற்கு அப்பாவும் மகளும் தினமும் காலை, மாலை இருவேளையும் விளையாட சென்று விடுவார்களாம்அவரது அப்பாவுக்கும் விளையாட்டில் அதிக ஆர்வமாம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் மாநில அளவில்  குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறாராம். அதனை தொடர்ந்து அவரது குடும்ப வறுமை காரணமாக அவரால் விளையாட்டை தொடர முடியாமல் போனதாம். தான் அடையமுடியாமல் போன இலட்சியத்தை தனது மகளாவது அடைய வேண்டும்காமென்வெல்த் , ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவள்  நிச்சயம் தங்கப் பதக்கம் பெறுவாள் என்று கூறும் அவரது பேச்சில்  நம்பிக்கை  மிளிர்கிறது

மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் ,வெள்ளி , வெண்கலம் என குவித்துக் கொண்டிருக்கும் இல்லேஸ்வரிக்கு , ஒலிம்பிக்கில் தமிழகத்தின் தங்க தாரையாக விளங்க வேண்டுமென்பதே  கனவாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2010 முதல் 2012 -க்குள் பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்துள்ளார்.

இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனது சாதனைகளை துவங்கி விட்டார்.


எட்டாம் வகுப்பு படிக்கும் போது  ஜூனியர் பிரிவில்"மனித உரிமைகள் கழகத்தின்" சார்பாக தங்கப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடந்து  ஒன்பதாம் வகுப்பில் "சீனியர் பெஸ்ட் அத்தெலடிக்"  அவார்டையும்,
2010 -இல் நேசனல் அளவில் 2 தங்கத்தையும் , ஒரு சில்வரையும் வென்றார்.

தேசிய அளவில் 100  மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தையும், தொடர் ஓட்டத்தில் வெள்ளியையும் வென்றார்.

அதுமட்டுமல்லாமல், தென்மண்டல போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் 3 வெள்ளிகளையும் , நீளம் தாண்டுதலில் 3 வெண்கலத்தையும் கைப்பற்றினார்.     


இரண்டு வருடத்திற்குள், மாநில அளவில் நூறு மீட்டரில் 6 தங்கத்தையும்,   இருநூறு மீட்டரில்தங்கத்தையும் , நீளம் தாண்டுதலில் ஒரு தங்கமும் என மொத்தம் 8 தங்கத்தையும், 12  வெள்ளியையும் , 7 வெண்கலத்தையும் பெற்றுள்ளார்.

இவரது சாதனையைப் பாராட்டிய அன்றைய நெல்லை மாவட்ட கலெக்டர் " சிறந்த வீராங்கனை " என்ற பட்டத்தை 2011 -ல்  இல்லேஸ்வரிக்கு வழங்கினார்.

பதினாறு வயதினருக்குள்ளான சீனியர் பிரிவில் சிறந்த வீராங்கனைகளுக்கு   வழங்கப்படும் 10 ,000 ரூபாய் ரொக்கத் தொகையும் இந்த இல்லேஸ்வரிக்கு தான் கிடைத்திருக்கிறது.

தற்போது  திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த இல்லேஸ்வரியின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு  ,  அந்த பள்ளி நிர்வாகமே தினமும் 4 மணிநேரம் திருநெல்வேலி ஸ்டேடியத்தில் விளையாட  அனுமதி வழங்கியது

இல்லேஸ்வரியிடம்  உங்களது பொழுது போக்கு என்னவென்று கேட்டதற்குஅவரது தந்தை விடுமுறை தினங்களில்  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன்சிப் பட்டம் பெற்ற  "ஹேட்லி"-யின் சிடிக்களை போட்டு  காமிப்பாராம். கேரளாவைச் சேர்ந்த   பி.டி.உஷா மற்றும் அஞ்சு சார்சுகளின் சிடிக்களையும் அடிக்கடி போட்டு  காமிப்பாராம் , இந்த சிடிக்கள் தான் என்னை மேலும்
ஊக்கப்படுத்துவதற்கு காரணமாய் இருந்தது என்கிறார்.


தனது தந்தையின் ஊக்கத்தாலும்  தனது விடாப்பிடியான முயற்சியாலும் நிச்சயம் ஒலிம்பிக்கில் முத்திரை பதிப்பேன் என்கிறார் விவேகத்துடன் இல்லேஸ்வரி.


இறுதியாக  இல்லேஸ்வரி சில கோரிக்கைகளையும் அரசுக்கு முன் வைக்கிறார்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு விளையாட வசதியான மைதானங்கள் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டை  சீர் செய்தால் தமிழகத்திலிருந்தும்   பல ஒலிம்பிக் நடசத்திரங்கள் மிளிர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Thursday 26 July 2012

பாம்பனில் 40 ஆண்டாக இருளில் கிடக்கும் கிராமம்

கண் இருந்தும் குருடர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள் பாம்பன் கிராம மீனவ   மக்கள்இரண்டு மணி நேர மீன் வெட்டையே சகித்துக் கொள்ள முடியாதவர்களாய் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இந்த கிராம மக்களோ 24  மணி நேரமும் மின்சாரத்தை கண்ணால் காணாதவர்களாக இருக்கின்றனர்.  


இருளிலே பிறந்து , இருளிலே மடிவதென்பது இந்த ஊர் மக்களின் சாபக் கேடா என்ன ? அறிவியல் எவ்வளவோ வளர்ந்து வருகிறது. ஆனால் இப்படியும் இருளில் முழ்கி கிடக்கும் ஓர் கிராமம் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலம், பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட முந்தல்முனை என்ற இடத்தில் உள்ளது. இங்கு, 108 குடும்பங்கள், சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட இடத்துக்கு அரசு பட்டா, ஊராட்சி மன்ற ரசீது வழங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுவதால், வீடுகளுக்கு மின்சாரம் பெற விண்ணப்பிக்க முடியாமல், கடந்த 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது இந்த கிராமம்.

முந்தல்முனை கிராமத்துக்கு வீட்டு வரி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர், இந்து அறநிலையத் துறையிடம் மீனவர்கள் பல ஆண்டுகளாக முறையிட்டு வந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆனால், கோவில் இடத்தை தானமாகக் கொடுக்கவோ, விற்கவோ சட்டப்படி முடியாது என இந்து அறநிலையத் துறை தெரிவித்துவிட்டது. இதனால், மீனவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வரி ரசீது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மின்சாரம் கிடைக்காமல் மீனவக் குடும்பக் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.   படிக்க முடியாமலும், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த முடியாமல், மலைவாழ் மக்கள் போல் வாழ்ந்து வருகின்றனர்

ஜெ ஆட்சியில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து என்ன பயன் ? அதை பயன்படுத்த இந்த ஊர் மக்களுக்கு  மின்சாரம் கொடுக்க வில்லையே ?


முந்தல்முனை கிராமத்தை சேர்ந்த  பொன்னுச்சாமி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக முந்தல்முனையில் வசிக்கும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல், கேட்பாரற்று தெருவில் வசிப்பது போல் வாழ்ந்து வருகிறோம். தற்போது, ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வாடகைக்கு வழங்கிட, இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி, எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

அடுத்து அதே கிராமத்தை  சேர்ந்த சோமசுந்தரம் கூறுகையில் , நாங்க தான் படிக்கமா போயிடம்னாலும்  எங்க பிள்ளைகளும் படிக்க முடியல , எங்க இனமே இருட்டுல வாழ்க்கையை ஓட்டனுங்கிறது தான் எங்க தலை எழுத்த ? இந்த நிலையை மாத்த புதுசா யாரும் ஆட்சிக்கு வர மாட்டாங்களா என கண்ணீர் விட்டு குமுறுகிறார்.


குறிப்பு:
இந்த கட்டுரை புதிய தலைமுறைக்காக  பாம்பன் சென்று மக்களிடம் பேட்டி கண்டு எழுதப்பட்டுள்ளது .