மரணத்திற்கு பின்னால்?
பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.
இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......
அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?
பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,
அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது
இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”
மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்
Sunday 26 August 2012
மிளிரத் துடிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரம்
ஆங்கில கேள்வி தமிழுக்கு தோல்வி.
யுபிஎஸ்சி தேர்வு முடிவில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டு வருவதற்கு காரணம் என்ன?
"வெள்ளத்தால் அழியாது
வெந்தளாலாலும் வேகாது
கள்ளர்க்கோ பயமில்லை
காவலுக்கோ துணையில்லை"
எதனாலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியில் இன்றைய நிலையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வி ஒன்றும் , ஆங்கில வழிக்கல்வி என்று மற்றொன்றுமாய் . இரண்டு மொழிகளிலும் உள்ள பாடங்கள் ஒன்று தான். மொழி மட்டுமே வேறுபட்டவை என்றாலும் இன்றைய நிலையில் அரசு தேர்வுகளுக்காக(டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி) படிக்கும் மாணவர்களுக்கிடையே பெரும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளியிலிருந்தே தமிழ் வழியிலையே பயின்று வந்த மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது மன உழைச்சலினாலே பாதி பேருக்கு மேல் வேறு வேலைகளை தேடி செல்கின்றனர்.
அப்படி என்ன மன உழைச்சல் இருக்கப் போகிறது என்கிறீர்களா?
ஆரம்பக் கல்வியையே ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு போட்டித் தேர்வுகள் அவ்வளவு மலைப்பானது அல்ல. அதே சமயம் தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் சற்று மலைத்துப் போய் நின்று விடுகின்றனர்.
தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் தேர்வுக்கு தயாராகும் போது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு புத்தகங்களையும் வைத்து அர்த்தம் புரிந்து படிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால்,
தமிழ், ஆங்கில விளக்கம் பார்ப்பதற்காகவே படிப்பதில் பாதி நேரம் செலவிட வேண்டியிருக்கு.
இதற்கு என்ன தான் மாற்று என்கிறீர்களா?
தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் வழி சமச்சீர் கல்வி புத்தகத்திலையே முக்கியமான வாக்கியங்களை மட்டும் அடைப்புக் குறிக்குள்
கொடுக்கலாமே. இதனால் தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களும் இரண்டு மொழிகளிலும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்.
போட்டித் தேர்வுக்கு படிப்போருக்கும் மிக எளிமையானதாக அமையும். இந்த மாற்றத்தை கூடிய விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் ஆண்டுகளில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவிகிதத்தினை எட்டிப் பிடிப்பார்கள் தமிழக மாணவர்கள்.
இந்த மாற்றம் தொடர்பாக புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார் பட்டுக் கோட்டையைச் சேர்ந்த மாணவி அனுசுயா .
நான் பள்ளிக் கல்வியை பட்டுக் கோட்டை அரசு பள்ளியிலையே முடித்து விட்டு , தகவல் தொழில் நுட்டபத் துறையில் இந்த ஆண்டு பொறியியல் முடித்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பதே கனவென்பதால் தற்போது மனித நேயம் சைதை துரைசாமி "ஐ.ஏ.எஸ்" அகடாமியில் பயிற்சி பெற்று வருகிறேன்.
நான் பள்ளிப்படிப்பை தமிழ் மீடியத்திலையே படித்து விட்டு தற்போது "யுபிஎஸ்சி" தேர்வுக்காக முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பது கடினமாகவே உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் இங்கிலிஸ் மீடியம் என இரண்டு புத்தகங்களையும் அருகருகே வைத்துக் கொண்டு அர்த்தம் புரிந்து படிப்பதில் நேர விரயம் அதிகமாகிறது.
இதனால் தமிழ் மீடியப் புத்தகத்திலையே முக்கியமானவற்றை மட்டும் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு எளிமையானதாக இருக்கும்.
அடுத்ததாக , சென்னை அப்பாலோ "ஐ.ஏ.எஸ்" பயிற்சி மையத்தில் தற்போது
டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன்றுக்காக படித்து வரும் அபிநயா கூறுகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சத்தியிலே எனது ஆரம்பக் கல்வியை முடித்தேன் அதனைத் தொடர்ந்து மதுரை லதாமாதவன் பொறியியற் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்று விட்டு, கடந்த இரண்டு மாதங்களாக அப்பலோ பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். தமிழ் மீடியத்திலையே படித்து வந்ததால் பொருளாதாரம் , வணிகவியல் போன்ற அறிமுகமில்லாத பாடங்களை படிக்கும் போது ஆங்கிலத்தில் படிப்பது சற்று கடினமாகவே உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பில்
அறிவியலை முதற்பாடமாக படித்துவிட்டு தான் இந்த பயிற்சி மையத்தை அணுகுகிறார்கள் . பயிற்சி மையத்தில் இரு தரப்பு வழிக் கல்வி (தமிழ் , ஆங்கிலம்) மாணவரக்ளுக்கும் பயிற்சி தரப்படுவதால் பெரும்பாலும் ஆங்கிலதிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களைப் பற்றிய தெளிவு இல்லாமலே தேர்வுக்கு செல்லும் படியான சூழல் அமைகிறது. இன்னொரு பக்கம் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை முதன்மைப் பாடமாக படித்து வந்தவர்களுக்கு அறிவியலை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பதற்கு புதுமையாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு பல புத்தகங்களை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளதால் நீண்ட நேரம் விரயமாகிறது.
புதிய தலைமுறையின் இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்தினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று ஆதங்கமாய் கூறி முடிக்கிறார் அபிநயா.
Monday 6 August 2012
கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ?
இலட்சத்தில் ஒருவன் அதுவும் தமிழன்
"வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி
"வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி
திருநெல்வேலி மாவட்டம் நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் வறுமையின் ஓட்டத்தில் பிறந்த இல்லேஸ்வரி, தனது தொடர் ஓட்டத்தின் மூலம் பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் இல்லேஸ்வரி பத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இவரது தந்தை விவசாயி , தாய் இல்லத்தரசி இவளுக்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு.
மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இல்லேஸ்வரிக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாம். அவரது ஆர்வத்திற்கு முக்கிய காரணமே அவரது அப்பா முத்து என்கிறார் இல்லேஸ்வரி. நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வள்ளியூர் விளையாட்டு மைதானத்திற்கு அப்பாவும் மகளும் தினமும் காலை, மாலை இருவேளையும் விளையாட சென்று விடுவார்களாம். அவரது அப்பாவுக்கும் விளையாட்டில் அதிக ஆர்வமாம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறாராம். அதனை தொடர்ந்து அவரது குடும்ப வறுமை காரணமாக அவரால் விளையாட்டை தொடர முடியாமல் போனதாம். தான் அடையமுடியாமல் போன இலட்சியத்தை தனது மகளாவது அடைய வேண்டும். காமென்வெல்த் , ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவள் நிச்சயம் தங்கப் பதக்கம் பெறுவாள் என்று கூறும் அவரது பேச்சில் நம்பிக்கை மிளிர்கிறது.
மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் ,வெள்ளி , வெண்கலம் என குவித்துக் கொண்டிருக்கும் இல்லேஸ்வரிக்கு , ஒலிம்பிக்கில் தமிழகத்தின் தங்க தாரையாக விளங்க வேண்டுமென்பதே கனவாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2010 முதல் 2012 -க்குள் பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்துள்ளார்.
இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனது சாதனைகளை துவங்கி விட்டார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஜூனியர் பிரிவில், "மனித உரிமைகள் கழகத்தின்" சார்பாக தங்கப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடந்து ஒன்பதாம் வகுப்பில் "சீனியர் பெஸ்ட் அத்தெலடிக்" அவார்டையும்,
2010 -இல் நேசனல் அளவில் 2 தங்கத்தையும் , ஒரு சில்வரையும் வென்றார்.
தேசிய அளவில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தையும், தொடர் ஓட்டத்தில் வெள்ளியையும் வென்றார்.
அதுமட்டுமல்லாமல், தென்மண்டல போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் 3 வெள்ளிகளையும் , நீளம் தாண்டுதலில் 3 வெண்கலத்தையும் கைப்பற்றினார்.
இரண்டு வருடத்திற்குள், மாநில அளவில் நூறு மீட்டரில் 6 தங்கத்தையும், இருநூறு மீட்டரில் 1 தங்கத்தையும் , நீளம் தாண்டுதலில் ஒரு தங்கமும் என மொத்தம் 8 தங்கத்தையும், 12 வெள்ளியையும் , 7 வெண்கலத்தையும் பெற்றுள்ளார்.
இவரது சாதனையைப் பாராட்டிய அன்றைய நெல்லை மாவட்ட கலெக்டர் " சிறந்த வீராங்கனை " என்ற பட்டத்தை 2011 -ல் இல்லேஸ்வரிக்கு வழங்கினார்.
பதினாறு வயதினருக்குள்ளான சீனியர் பிரிவில் சிறந்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் 10 ,000 ரூபாய் ரொக்கத் தொகையும் இந்த இல்லேஸ்வரிக்கு தான் கிடைத்திருக்கிறது.
தற்போது திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த இல்லேஸ்வரியின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு , அந்த பள்ளி நிர்வாகமே தினமும் 4 மணிநேரம் திருநெல்வேலி ஸ்டேடியத்தில் விளையாட அனுமதி வழங்கியது.
இல்லேஸ்வரியிடம் உங்களது பொழுது போக்கு என்னவென்று கேட்டதற்கு, அவரது தந்தை விடுமுறை தினங்களில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன்சிப் பட்டம் பெற்ற "ஹேட்லி"-யின் சிடிக்களை போட்டு காமிப்பாராம். கேரளாவைச் சேர்ந்த பி.டி.உஷா மற்றும் அஞ்சு சார்சுகளின் சிடிக்களையும் அடிக்கடி போட்டு காமிப்பாராம் , இந்த சிடிக்கள் தான் என்னை மேலும்
ஊக்கப்படுத்துவதற்கு காரணமாய் இருந்தது என்கிறார்.
தனது தந்தையின் ஊக்கத்தாலும் தனது விடாப்பிடியான முயற்சியாலும் நிச்சயம் ஒலிம்பிக்கில் முத்திரை பதிப்பேன் என்கிறார் விவேகத்துடன் இல்லேஸ்வரி.
இறுதியாக இல்லேஸ்வரி சில கோரிக்கைகளையும் அரசுக்கு முன் வைக்கிறார்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு விளையாட வசதியான மைதானங்கள் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டை சீர் செய்தால் தமிழகத்திலிருந்தும் பல ஒலிம்பிக் நடசத்திரங்கள் மிளிர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.