Find us on Google+ September 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Monday 24 September 2012

கைக்குள் உலகத்தை கொண்டு வந்தது கூகுள்

கூகுளில் கிடைக்காத தகவல்களே இல்லை என்பது மட்டுமே நாம் அறிந்தது, ஆனால் தற்போது கூகுளிடம் ஒப்பந்தம் செய்யாத இந்திய நிறுவனங்களே இல்லை.

உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மாபெரும் ஆர்டர்களைப் பெறுவதிலேயே இன்போசிஸ், விப்ரோடிசிஎஸ் பேன்ற இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 80,000 கோடி சந்தை கொண்ட இந்தியாவின் நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்ப சேவையை வழங்கி அந்த சந்தையை வளைத்துப் போடுவதில் கூகுள் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 1,000 நிறுவனங்கள் கூகுளின் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் எல்லாமே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவை ஆகும்.
அமெரிக்கா, ஐரோப்பா, இப்போது வளைகுடா நாடுகள் பக்கமே இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. பொதுவாக உள்நாட்டு சந்தையை அவை மதிப்பதே இல்லை.
இந் நிலையில், இந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளை கூகுள் வழங்க ஆரம்பித்துள்ளது. கூகுள் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களில் வோல்டாஸ், யெபி, நீல்கமல், ஹிராநந்தனி, இன்டியா இன்போலைன் போன்றவை முக்கியமான நிறுவனங்களாகும்.
வேர்ட் பிராஸஸிங், இமெயில் சேவை, தரவுகள் (டேட்டா) சேமிப்பு உள்பட தன்னிடம் உள்ள எல்லா வகையான சேவைகளையும் கூகுள் இவர்களுக்கு வழங்குகிறது.
இவர்களை குறி வைக்க என 'India, Get Your Business Online' என்ற புதிய விற்பனைத் திட்டத்தையும் தொடங்கி, தனது மார்க்கெட்டிங் டீமை முழுமையாக களமிறக்கி விட்டுள்ளது கூகுள்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,000 நடுத்தர, சிறிய தொழில் நிறுவனங்களை தனது வலையில் இழுத்துவிட்ட கூகுள், இவர்களுக்கு இலவச கூப்பனையும் வழங்குகிறது. இதை வைத்து கூகுள் இணையத்தளத்தில் தங்களது நிறுவனத்தையும் பொருட்களையும் இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்யும் அனுமதிக்கிறது.
2014ம் ஆண்டுக்கள் 5 லட்சம் இந்திய தொழில் நிறுவனங்களை தனது சேவைக்குள் கொண்டு வருவது கூகுளின் திட்டமாம்.

Thursday 6 September 2012

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

இன்றைய நிலையில்  வயது வித்தியாசமேயின்றி  அனைவரது கை இடுக்குகளிலும் ஆறாவது விரலாக பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறது இந்த கைபேசி.
இயந்திர உலகில் நாம் படும் இன்னல்களுக்கிடையில் நம்மோடு சேர்ந்து வியர்வைக்குள்ளும்,  நெரிசல்களுக்குள்ளும்  சேர்ந்து அல்லல் படுவதோடு மட்டுமல்லாமல்  அழுக்குகளையும்  படிய வைத்து கொள்கிறது.

உண்ணும் போதும் , உறங்கும் போதும்  என்று  கூடவே  நம்முடன் பயணம் மேற்கொள்ளும் கைபேசிகளின் சுகாதாரத்தைப் பற்றி என்றேனும் நாம் கவலைப்பட்டதுண்டா?

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் ஓர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
நம் வீட்டு கழிவறைகளில் இருக்கும் கிருமிகளை விட நாம் கையில் வைத்திருக்கும்
கைபேசிகளில் தினந்தோறும் படியும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமென்று .

சின்ன சின்ன விசயங்களை நாம் கண்டுக்காமல் விட்டுவிடுவதன் விளைவு தான் இந்த திடுக்கிடும் தகவலின் மறுபக்கம்.
தற்போது வயிறு சம்பந்தமான நோய்களால் அதிகப்படியான  மக்கள் மருத்துவமனை
வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர். 
இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மட்டுமல்ல ,
ஆறாவது விரலான செல்போன்களையும் கையில் இணைத்துக் கொண்டே உண்பது தான்.

வாய்க்கு அடைப்பு போடாவிட்டாலும் பரவாயில்லை, இயன்றவரை  கைபேசிக்கு உறை போட்டு பயன்படுத்துங்கள்.
முடிந்தவரை துணிகளால் ஆன உறைகளை பயன்படுத்தினால் அடிக்கடி சுத்தம் செய்து பயன் படுத்துங்கள்.
சுகாதாரம் நம்மிடம் உள்ள சின்ன சின்ன விசயங்களில் இருந்தே தொடங்குகிறது.

Tuesday 4 September 2012

முதல் அர்ப்பணிப்பு

என் முதல்
அழுகையைக் கேட்டு
ஆனந்தம் கொண்ட
என் அன்னைக்கு
எனது முதல் அர்ப்பணிப்பு
என் எழுத்துக்கு கிடைத்த
அங்கீகாரமே ...

பயணங்கள் தொடரும் ...