Find us on Google+ July 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Thursday 26 July 2012

பாம்பனில் 40 ஆண்டாக இருளில் கிடக்கும் கிராமம்

கண் இருந்தும் குருடர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள் பாம்பன் கிராம மீனவ   மக்கள்இரண்டு மணி நேர மீன் வெட்டையே சகித்துக் கொள்ள முடியாதவர்களாய் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இந்த கிராம மக்களோ 24  மணி நேரமும் மின்சாரத்தை கண்ணால் காணாதவர்களாக இருக்கின்றனர்.  


இருளிலே பிறந்து , இருளிலே மடிவதென்பது இந்த ஊர் மக்களின் சாபக் கேடா என்ன ? அறிவியல் எவ்வளவோ வளர்ந்து வருகிறது. ஆனால் இப்படியும் இருளில் முழ்கி கிடக்கும் ஓர் கிராமம் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலம், பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட முந்தல்முனை என்ற இடத்தில் உள்ளது. இங்கு, 108 குடும்பங்கள், சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட இடத்துக்கு அரசு பட்டா, ஊராட்சி மன்ற ரசீது வழங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுவதால், வீடுகளுக்கு மின்சாரம் பெற விண்ணப்பிக்க முடியாமல், கடந்த 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது இந்த கிராமம்.

முந்தல்முனை கிராமத்துக்கு வீட்டு வரி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர், இந்து அறநிலையத் துறையிடம் மீனவர்கள் பல ஆண்டுகளாக முறையிட்டு வந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆனால், கோவில் இடத்தை தானமாகக் கொடுக்கவோ, விற்கவோ சட்டப்படி முடியாது என இந்து அறநிலையத் துறை தெரிவித்துவிட்டது. இதனால், மீனவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வரி ரசீது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மின்சாரம் கிடைக்காமல் மீனவக் குடும்பக் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.   படிக்க முடியாமலும், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த முடியாமல், மலைவாழ் மக்கள் போல் வாழ்ந்து வருகின்றனர்

ஜெ ஆட்சியில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து என்ன பயன் ? அதை பயன்படுத்த இந்த ஊர் மக்களுக்கு  மின்சாரம் கொடுக்க வில்லையே ?


முந்தல்முனை கிராமத்தை சேர்ந்த  பொன்னுச்சாமி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக முந்தல்முனையில் வசிக்கும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல், கேட்பாரற்று தெருவில் வசிப்பது போல் வாழ்ந்து வருகிறோம். தற்போது, ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வாடகைக்கு வழங்கிட, இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி, எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

அடுத்து அதே கிராமத்தை  சேர்ந்த சோமசுந்தரம் கூறுகையில் , நாங்க தான் படிக்கமா போயிடம்னாலும்  எங்க பிள்ளைகளும் படிக்க முடியல , எங்க இனமே இருட்டுல வாழ்க்கையை ஓட்டனுங்கிறது தான் எங்க தலை எழுத்த ? இந்த நிலையை மாத்த புதுசா யாரும் ஆட்சிக்கு வர மாட்டாங்களா என கண்ணீர் விட்டு குமுறுகிறார்.


குறிப்பு:
இந்த கட்டுரை புதிய தலைமுறைக்காக  பாம்பன் சென்று மக்களிடம் பேட்டி கண்டு எழுதப்பட்டுள்ளது .


Wednesday 18 July 2012

நூறு நாள் வேலை திட்டம் பலன் தருமா ?

கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டமாக 2008-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தது. 

 

கிராமப்புற பாமர மக்கள் எல்லாம் நகர்புறங்களை  நோக்கி படையெடுக்க ஆரம்பித்ததனால் தான் இந்த திட்டமே கொண்டுவரப்பட்டது.

 

இப்புதிய முறையை, ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பகுதியில், இம்முறை கையாளப்படுகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் இப்போது தான் இம்முறையை துவங்கியுள்ளனர். தற்போது, தமிழகத்திலும் இந்த தணிக்கை முறையை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.  தமிழகத்தில் இத்திட்டத்திக்கு மிகப் பெரிய வரவேற்பு நிலவுகிறது.

இத்திட்டத்தின் அடிப்படையில் நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் ஆண், பெண் என இருபாலரும் அடங்குவர். அவர்களது கிராமத்தின் சுற்றுசூழலை செம்மைப் படுத்துவதே இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

 

இதன்  அடிப்படையில் காட்டு வளங்களைப் பாதுகாத்தல், குளம், குட்டை, ஏரிகளை  செப்பனிடுதல் , சாலை பணிகளை சீர்திருத்துதல் மற்றும் சாலை இணைப்பு வசதியினை மேம்படுத்துதல் , மரம் நடுதல் , பழுதுபட்டுள்ள கால்வாய்களை சீர் செய்தல் , களைகளை களைதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

18 வயது முதல் 60 வயதினர் வரை இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். தனி நபருக்கென மட்டுமல்லாமல் , மொத்த குடும்ப உறுப்பினர் அனைவரும்

இத்திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். அவர்களுக்கென தனித்தனியாக "வேலை அட்டை" வழங்கப்படுகிறது. தினசரி இவர்களது பணி நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை.

 

ஒவ்வொரு கிராமத்திற்கும் கீழ் மக்கள் நலப் பணியாளர்களை நியமித்து அவர்களது கட்டுப்பாட்டின் கீழ்  தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் செயல்பட்டு வந்தது.  வாரம் ஒருமுறை பணியாளர்கள் வேலை செய்த நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப் பட்டு வந்தது.

 

ஆனால், இத்திட்டத்தில், பணிகள் நடக்காமலே பணிகள் நடந்ததாகவும், தொழிலாளர்களின் பெயர்களை போலியாக தயார் செய்து, திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உள்ளாட்சி பிரதிநிதிகளும், பணியாளர்களும் சுருட்டிக் கொள்ளும் செயல்கள், பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சுற்றிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அனைவரும் இந்த நூறு நாள் வேலை திட்டத்தையே நம்பி வாழ்கின்றனர். ஆனால் , போலியாக தொழிலாளர்கள் பட்டியலைத் தயார் செய்து, திட்டத் தொகையை சுருட்டிக் கொண்டு பணியே நடக்காமல், நடந்தது போல், "பில்' தயார் செய்து, பணத்தை கையாடல் செய்வது போன்ற செயல்களால் , தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளப் பணம் பாதிக்கு பாதியாக தான் கிடைத்தது.

 

மேலும், இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எவரேனும் உயிரிழக்க நேரிட்டால்

அரசாங்கத்தில் இருந்தே இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் கொடுக்கப்பட்ட வேண்டும், மேலும் ஏதேனும் பெரிய காயங்கள் ஏற்பட்டால் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப் படவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அம்சம்.

 

பரமக்குடி தாலுகாவில் உள்ள பொதுவக்குடி கிராமத்தில் நூறு நாள் வேளையில் ஈடுபட்டுள்ள பொன்னம்மாள்  கூறுகையில், போன வருஷம் என் கணவர் மரம் வெட்டும் போது தவறி வாய்க்கால்ல விழுந்து இறந்துட்டாறு  , எவ்வளவோ போராடியும் அரசாங்க்கத்துல இருந்து கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவே இல்லை , கடைசியா கலெக்டர் கிட்ட மனு கொடுத்த அப்பறம் தான் நடவடிக்கை எடுத்து எனக்கு பணம் கொடுத்தாங்க்கா அதுவும் 80 ஆயிரம் ரூபாய் தான் கைக்கு வந்தது, மீதம் 20 ஆயிரம் கேட்டதுக்கு வந்தத வாங்ககிக்கிட்டு போமானு மக்கள் நலப் பணியாளர் சொன்னார் என்று  ஆதங்கமாய் பேசுகிறார்.

 அதே பரமக்குடி தொகுதியில் பக்கத்து ஊரான "அண்டக்குடி" கிராமத்தைச்  சேர்ந்த வள்ளியம்மை கூறுகையில் தினமும் 8 மணிக்கு வேலைக்கு போயிட்டு பொழுது சாயுர நேரம் 4 மணிக்கு தான் வீட்டுக்கு திரும்புறோம், ஆனால் நாங்க சரியான நேரத்துக்கு வராது இல்ல, ஒளுங்க வேலையா செய்றது  இல்லனு சம்பளத்தை குறைச்சு தான் கொடுக்குராங்க , நாங்கலும் வேர வழியே இல்லாம கொடுக்குரத வாங்கிக் கிட்டு  இருக்கோம்.

 

  இந்த முறையான தவறுகளைக் கலைவதற்காகவே

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டக் கணக்குகளையும், கிராம ஊராட்சி கணக்குகளையும் தொழிலாளர்களே தணிக்கை செய்யும் புதிய நடவடிக்கையை, மாநில அரசு எடுத்துள்ளது. இதற்காக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடிவும் செய்யப் பட்டுள்ளது


 இந்நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகளை கண்காணித்து கொள்ளவும், அதற்காக ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளவும், அத்திட்டத்தில் வேலை செய்யும் , தொழிலாளர்களையே ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்..

 

இதன் மூலம், அவர்களின் கணக்குகளை அவர்களே சரிபார்த்துக் கொள்ள முடியும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை இப்பணிக்காக தேர்வு செய்ய உள்ளனர், ஒரு கிராமத்தின் கணக்குகளை, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் சரி பார்ப்பர். ஒரு கிராமத்தின் கணக்குகளை சரிபார்க்கும் நபர், இரு முறைகளுக்கு மேல், அந்த கிராமத்தின் கணக்குகளை சரிபார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 உள்ளாட்சித் துறை தணிக்கை அதிகாரிகள், உள்ளாட்சி கணக்குகளை தணிக்கை செய்து வருவதன் மூலம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது. இதையடுத்து, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர்களையே தணிக்கை பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யும் தொழிலாளர்களுடன், உள்ளாட்சி தணிக்கைத் துறையின் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் உடனிருப்பார். தணிக்கை மேற்கொள்ளும் கிராமத்தில், தொழிலாளர்கள் ஐந்து நாட்கள் இருக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள், கிராம கணக்குகள் அனைத்தையும் அவர்கள் பார்வையிடவேண்டும். அடுத்த இரண்டு நாட்கள், தணிக்கைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தினை அறிந்த பரமக்குடி வாழ் கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பும் கரவொலியும் கிளம்பியது.

 

 

பொதுவக்குடி கிராமத்தைக் சேர்ந்த முருகன் கூறுகையில் ,
எங்களது கணக்குகளை நாங்களே சரிபார்க்கும் முறை வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலோர், கல்வியறிவு இல்லாத பெண்கள். அவர்களுக்கு இப்புதிய முறை பயனுள்ளதாக இருக்கும். ,. மேலும் கிராமத்தின் அனைத்துப் பகுதிகளும் தொழிலாளர்களுக்க, நன்கு தெரியும் என்பதால் எந்த வித ஊழலும் இல்லாமல் , இனி இந்த திட்டம் செம்மையாக நடைபெறும் எனிக்கிறார் ஆனந்ததுடன்.


Sunday 1 July 2012

விண்வெளிக்கு செல்ல ஆசையா ?

விண்வெளி வீரர்கள் மட்டும் தான் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டன. 
நாம், விடுமுறைகளில் அண்டை ஊர்களுக்கு சுற்றுல்லா சென்று வருவது போன்று தற்போது அண்டை நாடுகளில் பேரண்டத்திற்கே சுற்றுலா செல்ல தங்களை  தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

விண்வெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர். வருகிற 2015-ஆம் ஆண்டில் இருந்து நிறைவேற்றப்படும் இத்திட்டத்திற்காக தற்போது அந்நிறுவனம், கடந்த காலத்தில் உளவு வேலைக்காக பயன்படுத்தப்பட்ட ரஷ்ய விண்கலங்களை விலைக்கு வாங்குகிறது. ரஷ்ய நிறுவனமான என்.பி.ஓ. மஷினோஸ்ட்ராயீனியாவிடம் இருந்து 4 விண்கலங்கள் மற்றும் இரு விண்வெளி நிலையங்களை வாங்கி அவை புதுப்பிக்கப்படுகின்றன. 

பின்னர், சுற்றுலா பயணிகள் விண்வெளி பயணமாக ஏதேனும் ஒரு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவர். பின் அங்கிருந்து பயணித்து 2,34,000 மைல்கள் தொலைவில் நிலவின் சுற்று வட்ட பாதைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கு 8 மாத பயணம் தேவைப்படும். இதை தொடர்ந்து விண்வெளியை சுற்றி பயணம் தொடரும். விண்வெளி பயணிகளுக்கு வசதி செய்து தருவதில் உலகின் 5ஆவது இடத்தில் உள்ள இந்நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தனது விண்கலம் ஒன்றை இயக்கி காட்டி சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது

முதலுதவி மாத்திரைகள், முடிவை நிர்ணயிக்கின்றனவா?

வீட்டின் முதலுதவி பெட்டி வாயை அடைத்தவாறு நீட்டிக் கொண்டிருப்பதும் , வலிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கிறது என்பதற்காக மருந்துகளின் நண்பனாக எல்லோர் வீட்டிலும் பாராசிட்டமால் மாத்திரைகள் குவியல்களாக தேக்கிவைக்கப்பட்டுள்ளன. 

இதன் விளைவு என்ன தெரியுமா?

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதை விட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

மருந்துகளின் நண்பன் இறுதியில் மரணப் படுக்கைக்கே வழி காட்டிவிட்டு போய் விடுகிறான்.