Find us on Google+ முதலுதவி மாத்திரைகள், முடிவை நிர்ணயிக்கின்றனவா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday 1 July 2012

முதலுதவி மாத்திரைகள், முடிவை நிர்ணயிக்கின்றனவா?

வீட்டின் முதலுதவி பெட்டி வாயை அடைத்தவாறு நீட்டிக் கொண்டிருப்பதும் , வலிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கிறது என்பதற்காக மருந்துகளின் நண்பனாக எல்லோர் வீட்டிலும் பாராசிட்டமால் மாத்திரைகள் குவியல்களாக தேக்கிவைக்கப்பட்டுள்ளன. 


இதன் விளைவு என்ன தெரியுமா?

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதை விட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

மருந்துகளின் நண்பன் இறுதியில் மரணப் படுக்கைக்கே வழி காட்டிவிட்டு போய் விடுகிறான்.



0 comments:

Post a Comment