Find us on Google+ இந்த நிலை நீடித்தால்..... இருண்ட தமிழகம் தான்........ ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 10 May 2012

இந்த நிலை நீடித்தால்..... இருண்ட தமிழகம் தான்........

 நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பவர் கட் ஒரு வழியாக முடிவுக்கு வர போகிறதென்று
பேராசைப் பட்டுக் கொண்டிருந்த வேலையில் இன்னொரு அணுகுண்டா  தமிழகத்திற்கு !

 நேற்றைய இரவில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தே
மீண்டும் பவர் கட்டிற்கு சாபமாக அமைந்து விட்டது. 
40 கோடி  ரூபாய் சேதத்தை ஏற்படுத்தி தந்த இந்த இழப்பை சரி செய்து மீண்டும்
மின் உற்பத்தி  செய்வதற்கு குறைந்த பட்சம் 2 மாதங்களாவது ஆகும் நிலை உள்ளது.

இப்படி அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தால்  என்ன தான் செய்ய போகிறது நமது  தமிழக  அரசு ?

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12 ,500 மெகாவாட் ஆகும் . ஆனால் தற்போது 8500 மெகாவாட் மின்சாரம்
மட்டுமே கிடைக்கும் நிலையில் ,மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 840  மெகா  வாட்  
மின்சாரமும் கிடைக்கப் போவதில்லை என்றால் நிச்சயம் இருண்ட தமிழகத்தில் தான் நாம் வாழ இருக்கிறோம் . 

1 comments:

நிறைய பேர் மின்சாரம் குறித்து பதிவுகள் வருகின்றன.அனல் மின்நிலையத்தில் ஏற்படும் தீவிபத்துக்களுக்கு காரணம் என்ன எனபதை யாரும் ஆராய்வதில்லை.மின்சாரம் அனைத்து பொதுமக்களுக்கும் என்ற சமூக உணர்வு கூட இல்லாமல் கம்பி வடம் இன்ன பிற திருட்டுக்களுடன் அரசுக்கும் மக்களுக்கு எதிராக செயல்படுவதுதான்.

Post a Comment