Find us on Google+ வொய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டி ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 10 February 2012

வொய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டி

தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது தான், ஆனால் பிஞ்சிலேயே தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் நெஞ்சை உருக்குலைய வைக்கிறது. 

      கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.

பள்ளியில் மாணவர்களை அடிப்பதே தவறு என்கிற சட்டம் வகுக்கப்பட்டு விட்டது, இந்த நிலையில் அவர்களின் குறைகளை திருத்திக் கொள்ள கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் வேணும். அதைதான் இந்த ஆசிரியையும் செய்துள்ளார்.   சாதாரண விசயத்தையே தாங்கிக் கொள்ளமுடியாத மாணவர்கள் இருக்கும் வரையில் இந்த சமுதாயம் எப்படி முன்னுக்கு வரப் போகிறது என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது?

பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி  . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.


இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும்

1 comments:

Sariyaa sonneenga... Indha maathiri kolavery songs-i ellam Sensor Board thadai seyyanum.

Post a Comment