Find us on Google+ வேற்று கிரக வாசியாக நீங்க ரெடியா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 21 February 2012

வேற்று கிரக வாசியாக நீங்க ரெடியா?

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்விப்பான் மற்றும் வாகனங்களினால்

வெளியேற்றப்படக்கூடிய புகையினால் ஒவ்வொரு நாளும் ஓசோனின் ஒட்டையை பெரிதாக்கி கொண்டே இருக்கிறோம்.

இந்த நேரத்தில் நாம் இருக்கும் பூமியை விட்டு விட்டு , புதிய பூமிக்குள் அடியெடுத்து வைப்பதற்கான நேரம் தற்போது வந்து விட்டது.


நமது விஞ்ஞானிகள் புதிய பூமியை கண்டறிவதில் அதிக அளவு ஆர்வம் செலுத்தியதன் விளைவாக super-Earth GJ 667Cc

என்ற புதிய பூமியை ஜெர்மனியை சேர்ந்த கில்லன் ஆங்கிலாடா-எஸ்கூட் என்ற விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.

இந்த புதியபூமி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமையை விட பத்து மடங்கு பெரியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் 4.5 மடங்கு அதிகமாக நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.

இந்த புதிய பூமி ஒரு முறை தனைத்தானே சுற்றிவர 28 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

பூமியில் இருந்து 22 ஒளி ஆண்டுகள் அதாவது 209 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் super-Earth GJ 667Cc உள்ளது.


200 முதல் 400 மில்லியன் விண்மீன் கூட்டங்கள் இந்த பேரண்டத்திலே உள்ளன.

அதிலே, இந்த புதிய பூமியானது மூன்று விண்மீன் கூட்டம் இணைந்தாற் போன்று காட்சி அளிக்கிறது.

எனவே இதனை M-CLASS குறுவிண்மீன் வகுப்பில் சேர்த்துள்ளனர்.இந்த கிரகம் பார்ப்பதற்கு ஒரு நீல நிற புள்ளியாக காட்சி அளிக்கிறது.


வான சாஸ்திரிகளுக்கே வியப்பூட்டும் நிலையில் GJ667Cc புதிய பூமி அமைந்துள்ளது.

இதன் புறப்பரப்பு மிகுதியான தண்ணீரை கொண்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் புவியினைப் போன்றே அனைத்து மூலக்கூறுகளும் அமைந்துள்ளதாகவும் கெப்ளரின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.

அப்படியே 90 சதவிகிதம் புவியினை ஒத்த வாயு மண்டலத்தைக் கொண்டுள்ளது.


இதில் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் அதிக அளவு அகச்சிவப்பு கதிர்களை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளது ,

அதோடு ஹைட்ரஜன், ஹீலியம், அயர்ன், கார்பன் மற்றும் சிலிக்கானும் போன்ற வேதி பொருட்களும் பூமியில் காணப்படுவது போலவே உள்ளது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த super-Earth GJ 667Cc மனித குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை என்றே சொல்லலாம்.








                                        






1 comments:

Angum manithargal vazha sathiam endral neengal sonna anaithum nijam endru solla lam

Post a Comment