Find us on Google+ இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ". ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 22 March 2012

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ".

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ".
எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது .
அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் நிலைமை
என்னத்துக்கு ஆகும்
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத்
தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை
கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல
தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 %
சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி
முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம்
மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு மூல
காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் ,
பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு
நாள் குறைந்து வருகிறது . வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா
.
சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக
(http://www.un.org/en/events/iyof2011/index.shtml. )
அறிவித்துள்ளது .

நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம் . நதியின்
பிறப்பிடம் அருவி . அருவியின் பிறப்பிடம் மலை உச்சி . வனம் அதிகம்
இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது . அந்த மண் ,அங்கு
மண்ணில் விழும் இலைச் சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறி
விடுகிறது . அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் ,
அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது . பிறகு ,பிடித்து
வைத்த மழை நீரை , சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது . இந்தச் சொட்டுகள்
இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது . சிறு நீரூற்றுகள் இணைந்து அருவியாக
மாறுகிறது . அருவி நதியாகிறது . வனத்தின் முக்கியத்துவம் இதுதான் . வனம்
பாதிக்கப்படும் போது நம் நீராதாரமும் பாதிக்கப்படும் . இது மட்டுமல்ல
,
நிலத்தில் வாழும் உயிரினங்களில் 80 % உயிரினங்கள் வனத்தில் தான்
வாழுகின்றன . மனிதனது அத்துமீறலால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில்
உள்ளன .

வனத்தை உருவாக்குவதில் மரங்கள் பெரும் பங்கு இருக்கின்றன . மரங்கள்
இல்லையென்றால் பூமியில் வனமே இல்லாமல் போய்விடும் . நாம் சுவாசிக்கத்
தேவைப்படும் பிராண வாயு ( oxygen o2) மரங்களில் இருந்தே கிடைக்கிறது .
தண்ணீர் , கிடைப்பதற்கும் மரங்களே முக்கிய காரணம் . நிலச்சரிவைத்
தடுப்பதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . உணவுப்பொருட்கள் , எரி
பொருட்கள் , பல்வேறு வகையான பொருட்கள் செய்ய என்று நாம் மரங்களில்
இருந்து பெரும் நன்மைகள் ஏராளம் . மரங்கள் இல்லாமல் மனிதனே இல்லை .
இயற்கை இல்லாமல் நம் பூமியே இல்லை . இயற்கையோடு இணைந்து வாழாமல்
நம்மால் நிலையான மகிழ்ச்சியையோ , வளர்ச்சியையோ எந்தக் காலத்திலும் பெற முடியாது .
இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இந்த மாதம் (மார்ச் 22) " உலகத்
தண்ணீர் தினம் ".
இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இந்த மாதம் (மார்ச் 22) " உலகத்
தண்ணீர் தினம் ".

1 comments:

good message-thank you

Post a Comment