Find us on Google+ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கசகசாவால் ஆறு மாதகால சிறை தண்டனையா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 16 April 2012

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கசகசாவால் ஆறு மாதகால சிறை தண்டனையா?

 
நமது வீடுகளில் சமைக்கும் உணவிற்கும்  மனத்திற்கும் காரணமே
அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பதினோரு வகையான நறுமணப் பொருட்களே
 என்று கூறினால் அது மிகையாகாது.
 
இதன் அடிப்படையில் நான் படித்த ஒரு விநோதமான செய்தியை
 உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
 
தன் மனைவி வாங்கி வர சொன்னாலே என்ற காரணத்தால் துபாயில்
 இருந்து புறப்பட்ட கணவர் ஒரு கிலோ கசகசா-வை வாங்கிக் கொண்டு
விமான நிலையத்தை அடைந்தார். விமான நிலையத்தில் நடந்த
பரிசோதனைக்குப் பின்னர் அவர் துபாய் போலிசால்
'போதை பொருள் கடத்தல் ' குற்ற சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டார் .
 
எதுவுமே புரியாத நிலையில், தமிழரை சிறை பிடித்ததற்கான காரணத்தை
 கேட்டறிந்த போது தங்கள் நாட்டில் போதைப் பொருட்களுள் ஒன்றாக
கருதப்படுவது கசகசா. அதை எடுத்து சென்ற காரணத்தினால்
 இவரை  'போதை பொருள் கடத்தல் ' பிரிவில் கைது செய்துள்ளோம்
என்று ஆணை பிறப்பித்தனர்,.
 
அடடா இந்த சாதாரண அஞ்சறைப் பெட்டி சமாசாரத்துக்கு  
ஆறு மாத கால சிறை தண்டனையா என உங்களுக்குள்ளே தோனுகிறதல்லாவா?
 
இனிமேலாவது வெளி நாடுகளில் இருந்து பொருட்களை
வாங்கி வரும் போது அந்த நாட்டின் ஏற்றுமதி பட்டியலை தெரிந்து வைத்து
கொண்டு பொருட்களை எடுத்து செல்லலாமே.

0 comments:

Post a Comment