உடல் உறுப்புகள் நன்கு செயல்பட்டும், நல்ல எழுத்து வடிவம் கொண்ட மொழிகள் இருந்துமே நம்மால் அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று மொழிகளுக்கு மேல் கற்றுக் கொள்ள முடியவில்லை என்பது உண்மை.
இந்த நிலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் படிக்கும் பிரெய்லி முறையிலும் இரண்டு பிரிவுகளா?
ஒன்று ஆங்கில பிரெய்லி முறை மற்றொன்று பிரெஞ்சு பிரெய்லி முறை.
இந்த இரண்டு தனிப்பட்ட மொழிகளால் ஒரு வழக்கின் தீர்ப்பே தள்ளி போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சமீபத்தில் நடந்த ஒரு கொலையை நேரடியாக பார்த்த வாய்பேசாத முடியோதவரை சாட்சி சொல்வதற்காக நீதி மன்றத்திற்கு அழைத்திருந்தனர். அவர் கூறும் தகவல்களை பிரெய்லி முறையில் மொழிபெயர்த்து சொல்வதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை வழக்கறிஞர் அழைத்து வந்திருந்தார் . இறுதியில் வாய் பேச முடியாதவர் சொன்ன சாட்சியை மொழிபெயர்பாலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் நீதி மன்றமே சலசலப்புடன் இருந்தது. இறுதியாக தான் தெரிந்தது அவர் பேசியது பிரஞ்சு பிரெய்லி முறை என்பது. ஆனால் நமது மொழிபெயர்பாளருக்கு தெரிந்ததோ ஆங்கில பிரெய்லி முறை. ஒரு மொழி மாற்றத்தால் அன்றைய விசாறனையே தள்ளி வைக்கப்பட்டது.
இரண்டு மொழிகளில் ஒன்றை மட்டும் ஆக்க பூர்வ மொழியாக கொண்டு வந்தால் உலகம் முழுதும் இருக்கும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர்கள் தங்களுடைய கருத்துகளை எளிதில் பரிமாறிக் கொள்ள வழியாக அமையுமே சற்று சிந்தித்துப் பாருங்கள் .
0 comments:
Post a Comment