Find us on Google+ முல்லைப் பெரியாறு அணை ஓர் அலசல் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 20 December 2011

முல்லைப் பெரியாறு அணை ஓர் அலசல்


"116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்

எவ்வளவு நாள் தாங்கும் ?


கேரளா சொல்வது போல்

இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.

ஏற்கெனவே முதல் தடவையாக 1933ல்

40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே

செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்

உள் செலுத்தப்பட்டது.


2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -

நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -

லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,

கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்

கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -

ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையை போல்,

கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்

அணையே உருவாக்கப்பட்டு விட்டது.



பெரியாறு அணையின் வரலாறு தெரியுமா?


பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.

அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்

சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக

கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்

வரையரைக்குள் தான் இருந்தது)

எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்

இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு

பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை

999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு

ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த

அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்

கட்டி முடித்தனர்.


இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்

அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது

தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு

சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.

ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.

அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !


இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.

இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –

சுமார் 2,08,000 ஏக்கர்.

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய

4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்

பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்

இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.

இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்

பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்

பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.


பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?


கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,

இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்

மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்

ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.


பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே

15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை

தான் பயன்படுத்த முடியும்.

(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)


ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.

கொள்ளளவு 70 டிஎம்சி.

பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது

நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்

பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்

நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி

நிரம்பவே இல்லை.


அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -

பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற

குரல் -கூக்குரல்.

சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.

அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்

மக்கள் செத்துப் போவார்கள். எனவே

உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !


புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?

மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,

நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக

இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.


சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !

அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு

தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே

என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.


அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.

பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து

2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து

மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக

தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.


புதிய அணையை கட்டப்போவது 1853 அடி

உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து

தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.

நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்

பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ

மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -

மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி

வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு,

இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்

திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து

ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய

நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.

எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி

இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக

கிடைக்காது.


புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -

புரிகிறது.


ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -

எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.

35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -

பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?


முதலாவதாக -

பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -

மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -

நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்

வந்தடையும்.

பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்

(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,

நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு

உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய

போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.

வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி

இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு

அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்

ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து

தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !

எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்

என்கிற பேச்சே அபத்தமானது.


இரண்டாவதாக -


1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.

1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது

என்று குரல் எழுப்பினார்கள்.

பயத்தைக் கிளப்பினார்கள்.

சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.


1999-இல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்

அண்ணா பல்கழைக்கழக பேராசிரியர் மற்றும் கட்டிட பொறியாளர்

துறையில் வல்லுனரான சாந்த குமார் கூறுகையில் இன்னும்

200 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் ஆற்றலுடையது பெரியாறு

அணை என்றார்.


இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,

சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை

என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -

156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்

என்று அனுமதியே கொடுத்தது.


விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?

மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,

கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்

இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி

விட்டார்கள்.


மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.

இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்

பரிசீலனையில் இருக்கும்போதே -

தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக

இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்

ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை

கட்ட வேண்டும் என்று.


பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.

பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.

உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

பந்த் நடத்துகிறார்கள்.

இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்

கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயமஐ

இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.


உண்மையில் சொல்லப் போனால் பெரியாறு அணையில்

நொடிக்கு 45 லிட்டர் தண்ணீர் மட்டுமே வீணாகி வருகிறது

இது ஐந்தில் ஒரு பங்கு தான்.இதனால் அணைக்கு எந்த பாதிப்பும்

வராது. நொடிக்கு 250 லிட்டர் தண்ணீர் வெளியேறினால் தான்

அணை உடைவதற்கு வாய்ப்புண்டு. இதனை சிந்தித்து பாருங்கள்.


இந்தியா-பாகிஸ்தான் போன்று இன்று தமிழகம்-கேரளா

மாறிவருவது எந்த விதத்தில் நியாயம்? நாம் அவர்களின்

தொழில் நிலையங்களை மூடி வருவதும், அவர்கள்

தமிழர்களை அகதிகளாக துறத்தி விடுவதும் அதோடு மலைக்குச்

செல்லும் ஐயப்ப பக்தர்களை தரிசனம் செய்ய விடாமல்

பாதி வழியிலே மறித்து திருப்பி அனுப்புவதும் நியாயமான

செயலா?


இதற்கு இடையே "டேம் 999" படம் வேறு.

இந்த படத்தினைப் பாராட்டி கேரள அரசு இயக்குனருக்கு

விருதுகள் வேற வழங்கியுள்ளது.


ஏன் இந்த கொலவெரி???????

இதற்கெல்லாம் தகுந்த தீர்ப்பை பாராளுமன்றம் விரைவில்

எடுக்க வேண்டும்...

இல்லையென்றால் அணை உடைந்து மக்கள் அழிவதற்குள்

இரண்டு மாநில மக்களும் சண்டையடித்தே அழிந்து விடுவர் போல.



1 comments:

padhivu nandru aanaal indru kaalai deccan chronicle aangila idhazhil ulagin miga pazhaya anai endrum idhum innum paththu varudangal thaakkupidikkadhu endru ezhudhi irrukindrana edhu sari

Post a Comment