Find us on Google+ January 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Tuesday 31 January 2012

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்


உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?


1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்

5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.



என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

1.மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

2.மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.

4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

5.நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.


" எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"


Friday 27 January 2012

மறவாத மம்தா பானர்ஜி

இப்படியும் ஒரு முதல்வரா?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,"மறக்க முடியாத நினைவுகள்'என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தன் குழந்தை பருவம் குறித்து அவர் எழுதியுள்ளதாவது: பள்ளியில் படிக்கும்போது, எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, எனக்கு துரோகம் செய்தாள். கணித தேர்வின்போது, தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், நான் எழுதி முடித்து விட்டேன். அருகில் அமர்ந்திருந்த தோழிக்கு உதவுவதற்காக, அவளுடைய விடைத் தாளை நானும், என்னுடைய விடைத்தாளை அவளும் மாற்றிக் கொண்டோம். மீதமிருந்த நேரத்தில் என் தோழிக்காக சில கணக்குகளை பூர்த்தி செய்தேன். மணி அடித்தபோது, என்னுடைய விடைத்தாள், தோழியிடம் தான் இருந்தது. தேர்வு கண்காணிப்பாளரிடம், என்னுடைய விடைத் தாளை, என் தோழியே கொடுத்து விட்டாள்.

தேர்வு முடிவுகள் வெளியான போது, எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கணிதத்தை தவிர, மற்ற அனைத்து தேர்வுகளிலும் நல்ல மார்க் எடுத்து, தேர்ச்சி அடைந்திருந்தேன். கணித தேர்வில் தவறியதை என்னால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து, உரிய முறையில் விண்ணப்பித்து, விடைத்தாளை மறு ஆய்வு செய்யும்படி கோரினேன். அப்போது என்னுடைய விடைத்தாளில், என் தோழி, குறுக்கே கோடிட்டு அடித்திருந்தது தெரியவந்தது. மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, என் முதுகில் குத்திய சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அதோடு மட்டுமா என்ன?

தற்போது அனைவரும் "பாய் பிரண்ட்' பற்றி பேசி வருகின்றனர். ஆனால், என்னுடைய பள்ளி பருவத்தில், இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. பெற்றோர் என்னை கண்டிப்புடன் வளர்த்தனர். பள்ளி, வீடு, இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. இவ்வாறு அந்த புத்தகத்தில் மம்தா எழுதியிருந்தார்.

ஒரு மாநிலத்தையே தற்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கும் திறமை உடையவருக்கு , இளம் வயதில் சமூகத்தின் மீதான தாக்கம் இல்லை என்பது வியப்பிற்கு உறிய விசயமாக இருப்பதோடு அப்படிப்பட்டவர் எப்படி  முன்னாள் மத்திய இரயில்வே துறை நிர்வாகியாகவும் தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் விளங்க முடிகிறது.....? 


Wednesday 25 January 2012

மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா பின்னடைவு

            கடந்தாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது குறித்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கடந்தாண்டில், 90 நாடுகளில் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று "உலக அறிக்கை 2012' என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவைக் குறித்து அந்த அமைப்புக் கூறியிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விஷயத்தில் கடந்தாண்டு ஏமாற்றமே அளிக்கிறது. விசாரணைக் காவல் சாவுகள், போலீஸ் அத்துமீறல்கள், விளிம்பு நிலை மக்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவதில் தோல்விகள் என, கடந்தாண்டு அவநம்பிக்கையையே அளிக்கிறது. ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, அரசியல் தலைவர்களும், ஆலோசகர்களும் கூறிய போதும் அவற்றைப் புறக்கணித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், காஷ்மீரில் கடந்தாண்டு வன்முறைகள் குறைந்துள்ளன. குற்றம் செய்த வீரர்களை விசாரிப்பது, போலீஸ் துறையில் சீர்திருத்தம், சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது போன்றவற்றில் இந்தியா போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய வாய்ப்புகளைத் தவற விட்டது. வெளிநாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கும் தலைமை வகிப்பதற்கு, இந்த இரு அமைப்புகளில் உள்ள தனது உறுப்பினர் அந்தஸ்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தியா தவறி விட்டது. அதேநேரம், சிரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த கொடூரங்கள் விஷயத்தில் இந்தியா மவுனமாகவே இருந்துவிட்டது.

Saturday 21 January 2012

ஒரு ரூபாய் அரிசிக்கு 400 ரூபாய் எரிவாயுவா?


விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. இந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசு? நல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர்.

ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர், மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர். பின்னர் அந்த அட்டையின் அடிப்படையில் மேல்தட்ட மக்களான 5000 வருமானம் வாங்குபவர்களுக்கு பாதி சலுகைகளை கொடுக்க மறுத்தனர். காரணம் கேட்டால் கீழ்தட்டு மக்களுக்கு அதிகமாக வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் என்றார்கள்.

அதோடு மட்டுமா? அதிக அளவு சீனி வாங்கினால் அவர்களுக்கு அரிசி கிடையாது இது என்ன புதிய சட்டமோ? அடுக்கடுக்கான அவலங்களின் பாதையில் தொடர்ந்து..., வாயு சிலிண்டர்கள் வைத்து இருந்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு மண்ணெண்ணெய் என்று புதிய சட்டம் பிறப்பிக்க ஆரம்பித்தனர் மீண்டும் விடாத கருப்பாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது இந்த ஊழல்.

சென்ற ஆட்சியிலாவது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எரிவாயுவான மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. வருடத்திற்கு 52கோடி லிட்டர் கண்டிப்பாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினாலும் 400 ரூபாய்க்கு எரிவாயுவின் விலையை கூட்டியதோடு நிறுத்திக் கொண்டது. ஆனால் இந்த ஆட்சியில் வாயு சிலிண்டர்களின் விலை முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மண்ணென்ணெய்யையும் வருடத்திற்கு 48 கோடி லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர்.

மீதமுள்ள 4 கோடி லிட்டர் மண்ணெண்ணெய்யை எங்கே கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லை? இப்படியே போனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து விடும் தருணம் மிக தொலைவில் இல்லை.



Friday 20 January 2012

பணமா? பதவியா?


எத்தனையோ தாலுகாக்களில் இன்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் தான் இருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்திவிட்டால் மட்டும் போதுமா? லட்சங்களை வாங்கிக் கொண்டும், ஆட்சிக் கோட்டாவிலும் பலரை கிராம நிர்வாகத் துரை அதிகாரியாக அமைத்து விட்டு உண்மைக்கும், கடின உழைப்பிற்கும் முன்னுரிமை அளிக்கமாலே சென்று கொண்டிருக்கிறது நமது சமுதாயம் ............

இதனால் பதவிக் காலம் முடிவடைந்து பணி ஓய்வு பெற்ற பல கிராம நிர்வாக அதிகாரியின் இடம் காலியாகவே உள்ளது. எத்தனை இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் பணம் என்ற ஒரே காரணத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு உதாரணமாக ஒரு சான்றை உங்கள் முன் வைக்கிறேன்.

        பதவி ஓய்வு பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரங்கோட்டை பகுதியில் இன்னும் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப் படவில்லை. எவருமே லஞ்சம் கொடுக்க முன்வராத சூரங்கோட்டை பகுதியில் இன்னும் அந்த பணியிடம் காலியாகவே உள்ளது. ஆகவே மாற்று ஏற்பாடாக தற்போது சூரங்கோட்டை பகுதியில் உள்ள காலியிடத்தையும் சேர்த்து பக்கத்து பகுதியான கேணிக்கரையில் தற்போது பணியாற்றி வரும் கிராம பஞ்சாயத்து அலுவலரை நியமித்துள்ளனர்.

இவர் காலையில் கேணிக்கரை பகுதியிலும் மதிய வேளையில் சூரங்கோட்டை பகுதியிலும் பணியாற்றி வருகிறார். அப்படியென்றால் இவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல இரண்டு சம்பளமா என்றால் அதுவும் கிடையாது.

நம் தமிழகத்தில் என்ன மக்கள் தொகைக்கா பஞ்சம்இல்லை!

வேலையில்லா பட்டதாரிகளுக்குத் தான் பஞ்சமா?

அப்படி இருக்கையில் லஞ்சம் கொடுக்க முன் வராத காரணத்தினால் ஒருத்தர் இரண்டு கிராம நிர்வாகத்தை ஆண்டு கொண்டிருப்பது இந்த தமிழகத்திற்கே சாத்தியமா?????????????




Friday 13 January 2012

செயற்கை சட்டையா ?


இயற்கையை மாற்றி  செயற்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாம் தற்போது  எந்த வேலையும் தாமாக செய்யாமல் செயற்கையாகிய  இயந்திரத்திடம் ஒப்படைத்து விட்டு சோம்பேறியாக இருந்து வருகிறோம். ஆனால் தற்போது துணி துவைக்கும் இயந்திரம்  இருந்தும் துவைக்க கூட நேரமில்லாமல் இருக்கும் மக்களுக்காக கண்டுபிடிக்கப் பட்டது தான் செயற்கை ஆடை. 

டைட்டானியம் ஆக்சைடை பயன்படுத்தி தற்போது செயற்கை ஆடை முறையை கண்டறிந்துள்ளனர்.  நைட்ரஜன் ,சில்வர் மற்றும்  அயோடின் போன்ற கலவைகளும் இந்த ஆடை தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால்  அழுக்கை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஆடையின் மீது வெயில் பட்டவுடனே தானாகவே ஆடையிலுள்ள அழுக்கை
சுத்தம் செய்து கொள்கிறது.

நேரமில்லை நேரமில்லை என்று சொல்லித் திரிபவர்கள்  எல்லாம் தற்போது வெளி நாடுகளில் இந்த செயற்கை ஆடைக்குத் தான் மாறி வருகின்றனர்.  ஆனால் அவசரப்பட்டும் ஆசைப்பட்டும்
செயற்கையை நோக்கி சென்றால் நாளடைவில் நிச்சயம் பின் விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஏனெனில் டைட்டானியம் ஆக்சைடு கதிரியக்கத்தன்மை  வாய்ந்தது அதனை நாம்
பயன்படுத்தினால் விளைவு எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை  ....   அதனை எல்லாம்  கதிரியக்கத்தின் பெயரில் நடந்து வரும் பல  பெரும்புரட்சிகள் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டன.

ஆகவே முந்திக் கொள்ளுங்கள் ....  புதுமையை நம்பி உங்கள் ஆயுளை இழந்து விடாதீர்கள்.



அப்பாடக்கர் என்றால் என்ன ?


இது சென்னையை சேர்ந்த தக்கர் பாபா சென்னையில் சில காலம் இருந்த போது
சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும் ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக வந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும்.
அது போல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தும் தெரிந்தவனாக இருந்தால்
அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்செரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயானு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு.
அந்த ஸ்கூல் பெயரை சொல்லி கேட்டிங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. 

அப்பாடக்கர்  ஸ்கூல் எங்க இருக்குன்னு கேளுங்க, டக்குன்னு காட்டுவாங்க .

இப்டிதான்யா ஊருக்குள்ள ரொம்ப  பேறு வந்து வந்து போறதாலே புதுசு புதுசா வார்த்தை வலம் வந்து கொண்டு இருக்குய்யா !!!!!

Wednesday 4 January 2012

எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு


முன்பெல்லாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கடிதங்களைப் பரிமாறி வந்தோம். கடிதங்களின் வாயிலாக கிடைக்கப் பெறும் நலம் நலமறிய ஆவலுக்கு இணை வேறு எதுவுமே இல்லை. தபால் காரர் வந்து ஐய்யா போஸ்ட் என்று ஒரு சத்தம் கொடுத்தால் போதும் அனைவரும் பறந்து வந்து தபாலை வாங்குவர். அதோடு பண்டிகை காலங்களில் வாழ்த்து மடல்களின் வரவேற்பு அனைவரது இல்லத்தையும் ஆனந்தமாய் அலங்கரிக்கும். ஆனால் தற்போதைய நிலை தலை கீழாக மாறியுள்ளது. என்றைக்கு தொலைபேசிகள்   மற்றும் கைபேசிகளின் வரவேற்பு அதிகமானதோ அன்றே கடிதங்களுக்கும் வாழ்த்து மடல்களுக்கும் நாம் குட் பாய் சொல்லி விட்டோம்.  இந்த நிலையில் அறிவியலின் வளர்ச்சியை மேலும்  ஆக்கப் பூர்வமாக்கும் நோக்கத்தில்  கொரியர்களுக்கும் ஒரு ஆப்பு வைத்து வட ஏற்பாடு செய்து விட்டனர்.

அப்படி என்ன அந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்கிறீர்களா?  எலெக்ட்ரானிக் கிப்ட்  கார்டு முறை தான் இந்த புதிய உலகை ஆள தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. 

அதாவது நமக்கு மிக தொலைவில் இருப்பவர்களுக்கு நாம் நினைத்தவுடன் நம்மால் பரிசு பொருட்களைக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு வசங்கும் சேவையின் மூலம் இணையத்தில் நமக்கு தேவையான பொருட்களை டெபிட் கார்டு மூலம்  வாங்கி அந்த பொருளுக்கான  ரசீதை நேரடியாக எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு முறையில் பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியுடன் மின்னஞ்சலையும் இணைத்து கொடுக்கவும் அதை  சில நிமிடங்களில் சலானாக கிடைக்கப்பெறுகிறார் பெறுனர். அந்த சலானை அவர் உடனடியாக மாற்றி பொருளை பெற்று கொள்ளலாம்.  அதில் அவருக்கு ஒரு சந்தோசம் கிடைக்கப் பெறுகிறார். அனுப்புனருக்கும், பெறுனரிடம்  பொருள் கிடைத்தவுடன்  தகவல் அனுப்பப் படுகிறது.

இப்படி அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் காத்திருந்து பரிசுகளை தபால் மூலமோ அல்லது கொரியர் மூலமோ கிடைக்கப் பெறும் சுகமே தனி தான் .



Tuesday 3 January 2012

அழியாச் செல்வங்கள் கனிமவளங்கள்



இன்னும் 20 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி கிடைக்காது என கட்டுக்கட்டாக பீதிகளை கிளப்பி வருகின்றனர். நம் நாட்டில் கடலோரப்பகுதியில் எப்படி தோண்ட தோண்ட தண்ணீர் வருகிறதோ அதைப் போன்று சவுதி அரேபியாவில் தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கிறது. இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் பல பெட்ரோலியப் பேரல்கள் உள்ளன. இவைகளைக் கொண்டு இன்னும் 70 ஆண்டுகள் இந்த உலகமே பற்றாக்குறை இல்லாமல் எண்ணெய் வளங்களை பயன்படுத்தலாம்.


அதோடு பிரேசிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி லிட்டர் அளவிலான பெட்ரோலிய பேரல்களின் மூலம் இந்த உலகமே இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் எண்ணைய் வளங்கள் இல்லாமல் செழிப்புடன் வாழலாம் என சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பிரேசிலும் பெட்ரோலிய உற்பத்தியில் கொடிகட்டி பறக்கப் போகிறது.


அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாமல் இயற்கையின் பாதுகாப்புக்காக தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் நிலக்கரிகள் ஏராளம். ஆகவே இன்னும் 200 ஆண்டுகளுக்கு நமக்கு எண்ணெய் வளங்களைப் பற்றிய பயம் தேவையில்லை. இவ்வளவு பெட்ரோல் வளம் இருந்தும் நமது அரசு ஏன் இன்னும் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது ??


தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைப்பதற்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு 53 ஆக உயர்ந்து விட்டதாலும் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களின் விலையை 2.10 பைசா அதிகரித்துள்ளனர். பெட்ரோல் விலை கூடினால் ஒட்டு மொத்தமாக அன்றாட தேவை பொருட்களின் விலையும் தானாக கூடி விடுகிறது அல்லவா?

இதைத் தான் தலையில் அடித்தால் பாதம் வரை அதன் வீரியம் பரவும் என்பார்கள். இதனால் அடித்தட்டு மக்களின் நிலை இன்னும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரசின் கடன் சுமையை குறைப்பதற்காக மக்கள் அனைவரையும் கடன் காரர்கள் ஆக்கும் சமுதாயமாகவே இன்றைய சமுதாயம் உள்ளது.


உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு


மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது .பி.எம் நிறுவனம்.

இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது.

ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும். இந்த போட்டியில் வெல்வது குதிரைக் கொம்பு தான்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முதன் முறையாக ஒரு கம்ப்யூட்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. மனிதனுக்கும் ,ஒரு இயந்திரத்திற்கும் நடக்கும் போட்டியாகவே கருதப்பட்ட இந்நிகழ்ச்சி பலரையும் ஆச்ச்சரியத்தில் வாய் பிளக்க வைத்தது உண்மை தான். ஒவ்வொரு பதிலும் துல்லியமானதாகவும், வேகமானதாகவும், நம்பிக்கையுடனும் தெரிவிக்க வேண்டும். மனிதர்களை போல சிந்திக்கும் திறனும், தகவல் திரட்டுகளை சரியாகப் பயன்படுத்தும் திறனும், கேள்வியின் நோக்கையும், சூழலையும் புரிந்து கொள்ளும் திறமையும் கொண்டதாக வாட்சன் படைக்கப்பட்டது. இது ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் துறையில் முற்றிலும் ஒரு புதிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாட்சன் கணினி, மொத்தம் 90 .பி.எம் பவர் 750 சர்வர்களின் குழுமத்தினையும், 16 டெராபைட் ரோம் திறனையும், மொத்தம் 2880 பவர், 7 பிராசசர் சக்தியும் கொண்ட ஒரு பிரமாண்ட படைப்பாகும். ஒவ்வொரு பவர் 750 சர்வரும், 3.5 ஜிகா ஹெட்ஸ் பவர் 7 கொண்ட 8 கோர் ப்ராசசரை கோரும் நான்கு த்ரெட்களை உபயோகப்படுத்துகின்றது.

வாட்சன் கணினி, 500 ஜிகாபைட்ஸ் தகவல்களை செயல் கட்டுப்பாடு செய்யும் திறமை கொண்டது. அதாவது, ஒரு நொடியில் பத்து லட்சம் புத்தகத்தை வாசிக்கும் திறனைக் கொண்டது. இதனை வடிவமைப்பதற்கு மட்டும் 3 மில்லியன் டாலர் செலவானது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சனின் தகவல்

திரட்டிற்காக, வெவ்வேறு வகையான மூலாதாரங்கள் பயன்படுத்தப்பட்டன. வெவ்வேறு என்சைக்ளோபீடியா, டிக்சனரி , தெசாரஸ் , டேட்டாபேஸ்கள் , டாக்ஸானமி, ஆன்டாலாஜி போன்றவற்றால் அறிவூட்டப்பட்டது. பின்ன என்னங்க, நொடிப்பொழுதில் பதில் சொல்ல வேண்டும் என்றால் சும்மாவா.

இப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணம் , மனிதர்களின் மிக முக்கிய காரணம், மனிதர்களின் மூளையை அப்படியே வடிவமைக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, மனிதர்களின் நடைமுறை மொழியை அதன் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்

ஆற்றலுடன் ஒரு இயந்திரத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை இலக்காகும். ஏனென்றால், மனிதர்களுக்காக மனிதர்களே படைப்பது தானெ ஒரு இயந்திரம்..... அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் .... இப்படியே போனால் வருங்காலத்தில் மனிதனே தேவையில்லை இயந்திரங்களே போதும் என்ற நிலைக்கு இந்த உலகமாகவே மாறிவிடப்போகிறது!!!!!!!!!!.